முதலமைச்சர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் நீக்கம் ஏன் தெரியுமா….? குட்டி ஸ்டோரி கூறிய ராகுல்…

பஞ்சாப் முதலமைச்சர் பதவியில் இருந்து கேப்டன் அமரீந்தர் சிங் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் கேப்டன் அமரீந்தர் சிங். இவருக்கும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அமரீந்தர் சிங் பதவி விலகினார்.அதையடுத்து, பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார் கேப்டன் அமரீந்தர் சிங். பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் கேப்டன் அமரீந்தர் சிங்.பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது.

பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்தார் ராகுல் காந்தி. இதனால் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அதிருப்தியடைந்தார்.இந்நிலையில், பஞ்சாப் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், பஞ்சாபின் பதேகர் சாஹிப்பில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து கேப்டன் அமரீந்தர் சிங் ஏன் நீக்கப்பட்டார் என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்க ஒப்புக் கொள்ளாததால் தான் அவர் நீக்கப்பட்டார். மின்சாரம் வழங்கும் நிறுவனங்களுடன் தனக்கு ஒப்பந்தம் உள்ளதாக அவர் கூறினார்.
போதைப்பொருள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று நான் தொடர்ந்து கூறினேன். நான் இதை மீண்டும் சொல்கிறேன், பஞ்சாப் பரிசோதனை செய்ய வேண்டிய மாநிலம் அல்ல. போதைப்பொருள் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்துக்கொண்டால் பஞ்சாபில் வளர்ச்சியும் வளர்ச்சியும் அர்த்தமற்றதாகிவிடும்.இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

KavinKumar

Recent Posts

விஜய் போல பாஜக பகல் கனவு காண்கிறது.. ஜெயக்குமார் சரமாரி பேச்சு!

2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…

52 minutes ago

வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!

சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…

1 hour ago

’இனி எந்த போராட்டமும் இல்லை’.. விஜயலட்சுமி வெளியிட்ட கடைசி வீடியோ!

சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…

2 hours ago

மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?

நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…

3 hours ago

அமைச்சர் என் குடும்பத்தைப் பற்றி அப்படி பேசினார்.. மருத்துவரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி!

கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…

4 hours ago

This website uses cookies.