நீ என்னை லவ் பண்றியா? இல்ல அவனையா? லவ் டார்ச்சர் : விரக்தியடைந்த இளம்பெண் விபரீத முடிவு!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மடுகுலப்பள்ளி மண்டலம் சிந்தலகுடத்தை சேர்ந்த கோட்டா ராமலிங்கம், ராஜிதலா தம்பதியின் மகள் கோட்டா கல்யாணி (19) படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தற்போது வீட்டில் உள்ளார்.

இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த அரூரி சிவா மற்றும் கொம்மனபோயினமது ஆகிய இருவரும் ஒருதலை காதல் என்ற பெயரில் கல்யாணியை தொடர்ந்து சில காலமாக துன்புறுத்தி வந்துள்ளனர்.

தங்கள் இருவரில் யாரையாவது காதலிக்கவில்லை என்றால் கல்யாணி புகைப்படங்களை இணைத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் இம்மாதம் 6ம் தேதி திப்பட்டி மண்டலம் சர்வாரம் கிராமத்தில் உறவினர் ஒருவர் இறந்த நிலையில் கல்யாணியின் பெற்றோர் அங்கு சென்றனர்.

கல்யாணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மது , சிவா போன் செய்து கல்யாணிக்கு தொல்லை கொடுத்தனர். இதனால் வெறுப்படைந்த கல்யாணி விவசாயத்திற்காக வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மிரியாலகுடா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நல்கொண்டாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மூன்று நாள் சிகிச்சைக்குப் பிறகு கல்யாணி செவ்வாய்கிழமை இறந்தார். இதுகுறித்து கல்யாணி தாய் ராஜிதா அளித்த புகாரின் பேரில் மாடுகுலப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

புதன்கிழமை பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கல்யாணியின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நீதி வழங்கக் கோரி, குக்கடம் அட்டாக்கி – நார்கட்பள்ளி சாலையில் இறந்தவரின் உறவினர்கள் சடலத்துடன் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.

கல்யாணி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது மரண வாக்குமூலம் நீதிபதியிடம் எடுத்துக் கொள்ளப்பட்டதால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று போலீசார் கூறியதையடுத்து கல்யாணி உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில் மரண வாக்குமூலத்தில் தனது பெயரும் கல்யாணி தெரிவித்து இருப்பதை அறிந்த மது தாணும் அதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவாவை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை…ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…

22 minutes ago

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

15 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

16 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

16 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

16 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

17 hours ago

This website uses cookies.