வளர்ப்பு பிராணிக்காக இந்தியா வர மறுத்த மருத்துவர்…துப்பாக்கி முனையில் கைது செய்த ரஷ்ய ராணுவம் : சொந்த நாட்டிற்கு வர விருப்பம்!!

வனவிலங்குகளை வளர்ப்பு பிராணிகளாக வளர்ப்பதில் இந்தியாவில் சட்டச் சிக்கல் உள்ளதை அடுத்து உக்ரைனில் இருந்து இந்தியா திரும்ப மறுப்பு தெரிவித்த மருத்துவர் ரஷ்யப் படைகள் துப்பாக்கி முனையில் கைது செய்ததை தொடர்ந்து இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தனுக்கு பகுதியைச் சேர்ந்தவர் கிரி குமார் பாட்டில். கடந்த 2007ஆம் ஆண்டு மருத்துவ படிப்புக்காக உக்ரைன் சென்ற அவர் மருத்துவ படிப்பை முடித்து உக்ரைன் அரசு மருத்துவமனையில் எலும்பியல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியதை அடுத்து மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின் மூலம் உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மற்றும் மாணவர்களை இந்தியாவுக்கு மீட்டு வந்தது.

அப்போது தான் வளர்ப்பு பிராணிகளாக வளர்த்து வரும் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையை அங்கேயே விட்டு இந்தியாவுக்கு வர மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் அவரை சுற்றி வளைத்த ரஷ்ய படைகள் துப்பாக்கி முனையில் கைது செய்தது. உக்ரைனின் தற்போதைய நிலவரம் குறித்து தெரிவிக்க மாட்டேன் என கிரி குமார் பாட்டில் உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து அவரை ரஷ்ய படை விடுவித்தது.

இதையடுத்து இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்ட கிரி குமார் பாட்டில் தன்னுடன் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையை இந்தியாவுக்கு கொண்டுவர அனுமதி அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் வனவிலங்குகளை வளர்ப்பு பிராணிகளாக வளர்ப்பதில் சட்ட சிக்கல் உள்ளதை அடுத்து ஆந்திரா அல்லது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் தனி இடம் வழங்கினால் அதில் வைத்து சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையை வளர்த்துக் கொள்வதாக விண்ணப்பம் அளித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!

60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…

32 minutes ago

கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…

1 hour ago

“WHAT BRO”நான் குல்லா போடுற ஆள் இல்லை..மேடையில் விஜயை தாக்கிய பிரபலம்.!

வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…

2 hours ago

மருமகள், பேத்தியையும் விட்டுவைக்கவில்லை.. மாமியாருடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்!

கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

3 hours ago

சர்ப்ரைஸ்.! ‘குட் பேட் அக்லி’ பட ரிலீஸில் ட்விஸ்ட்…தமிழில் இதுவே முதல்முறை.!

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…

3 hours ago

எங்களுக்கு எந்த நிலத்தகராறும் இல்லை.. பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த செளந்தர்யா கணவர்!

சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…

4 hours ago

This website uses cookies.