ஆந்திரா : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரிலிருந்து 12 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மருத்துவர் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் காலுரு – சிப்பகிரி இடையே கல்லேவாகு நீரோடையில் காருடன் அடித்துச் செல்லப்பட்ட மருத்துவர் 12 மணி நேரத்திற்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உயிருடன் மீட்கப்பட்டார்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. திடீர் மழை காரணமாக ஏரிகள் குட்டைகள் நிரம்பி பல்வேறு பகுதிகளில் உள்ள நீரோடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று கர்னூல் மாவட்டம் காலுரு – சிப்பகிரி இடையே கல்லேவாகு நீரோடையில் ஒட்டியுள்ள சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது திடீரென மழை வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து சக வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் காரை தேடும் பணியில் ஈடுபட்டனர் இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கார் நீரோடையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டு சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்தவரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
பெங்களூரிலிருந்து ஆதோனி மீதாக குல்பர்கா சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்த காரில் சிக்கியிருந்த மருத்துவர் டாக்டர் ஷாகித் அன்சாரி பத்திரமாக மீட்ட பேரிடர் மீட்பு குழு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.