மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வெள்ளிக்கிழமை மேற்குவங்காளத்தின் சுரியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்காளத்தில் பாஜக 35 தொகுதிகளில் வெற்றிபெறும். அவ்வாறு 35 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றால் மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி 2025-ம் ஆண்டுக்கு மேல் நிலைக்காது’ என்றார்.
இந்நிலையில், அமித்ஷாவின் பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், கடந்த வெள்ளிக்கிழமை அமித்ஷா பேரணி ஒன்றில் பேசினார். அது பிரச்சினையில்லை.
ஆனால், ஜனநாயகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கவிழ்ப்போம் என்று நாட்டின் உள்துறை மந்திரி எப்படி பேச முடியும். நாட்டின் அரசியலமைப்பு மாறிவிட்டதா?
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 35 இடங்களில் வெற்றிபெற்றால் மேற்குவங்காளத்தில் மாநில அரசு அதன் முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்யாது என்று அமித்ஷா பேசக்கூடாது.
அமித்ஷாவின் பேச்சு மேற்குவங்காளத்தில் மாநில அரசை கவிழ்க்க முயற்சிகள் நடைபெறுவதை காட்டுகிறது. உள்துறை மந்திரி அமித்ஷா ரவுடி போல் பேசக்கூடாது’என்றார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.