அலுவலகத்திற்குள் புகுந்து MD மற்றும் CEO-வை முன்னாள் ஊழியர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஏரோனிக்ஸ் இன்டர்நெட் எனும் நிறுவனத்தில் ஃபெலிக்ஸ் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். ஆனால், அவரது பணியில் திருப்தியில்லாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு
அவரை பணியில் இருந்து மேலாண்மை இயக்குநராக ஃபனீந்திர சுப்ரமணியம் என்பவரும், தலைமை நிர்வாக அதிகாரியாக வினு குமார் ஆகியோர் நீக்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, ஃபெலிக்ஸ் சொந்தமாக தொழில் ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளார். அவரது நிறுவனத்திற்கு வரும் ஆர்டர்களை, ஏரோனிக்ஸ் இன்டர்நெட் நிறுவனம் தட்டிப் பறித்ததாக சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஃபெனிக்ஸ், நேராக தான் பணியாற்றிய நிறுவனத்திற்கு சென்று, மேலாண்மை இயக்குநர் ஃபனீந்திர சுப்ரமணியம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வினு குமார் ஆகியோரை சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இருவரிடமும் பேசிக்கொண்டே இருக்கும்போது, எதிர்பாராத விதமாக ஃபெலிக்ஸ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய ஃபெலிக்ஸை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
தொழல் போட்டியால் நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகளை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.