அரசு அதிகாரி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கார் ஓட்டுநர் : விசாரணையில் பகீர்!!
கர்நாடக அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தவர் பிரதிமா.
நேற்று முன்தினம் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு சென்ற பிரதிமாவை இரவு 8 மணிக்கு மேல் அவரது சகோதரர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது அவரது அழைப்பை பிரதிமா எடுக்கவில்லை. இதனால் அச்சமடைந்த சகோதரர் மறுநாள் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த 48 மணி நேரத்துக்குள் போலீசார் குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக கிரணை பிரதிமா பணி நீக்கம் செய்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிரண் அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளார். இதை அவர் ஒப்புக்கொண்டு போலீசில் அவர் வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.
கொலைக்குப் பின்னர் கிரண் பெங்களூருவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாமராஜநகருக்கு தப்பி ஓடினார். தனிப்படை அமைத்து கிரணை தேடிவந்த போலீசார் அவரை சாம்ராஜ்நகரில் கைது செய்தனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.