திருச்சியில் நடைபெற்ற வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளர் திமுக எம்.பி.ஆ.ராசா பேசுகையில்;- பெண் என்றால் பேய் கூட இரங்கும் பேய் கூட இரங்க வேண்டிய பெண்மைக்காக மோடி இரங்கவில்லை என்றால் பேயைவிட மோசமானவரா என்று கேள்வி இன்றைக்கு இந்தியாவில் எழுந்துள்ளது.
ஒரு பக்கம் ஊழல், ஒரு பக்கம் எதேச்சரிகாரம், மற்றொரு பக்கம் மதவாதம். இவை எல்லாம் சேர்ந்த பாஜக திமுகவை பார்த்து சொல்கிறது இது ஊழல் கட்சி, குடும்ப ஆட்சி என்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்திருக்கிற அரசியல் களம்தான் பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பப் போகிறது.
மோடியை எதிர்த்து வட மாநிலங்களில் ஒரு பெரும் படையே திரண்டு கொண்டிருக்கிறது. ஆனால் மோடி என்ற மதவாதத்தை வீழ்த்த வேண்டும் என்றால் படை மட்டும் இருந்தாலோ அல்லது தலைவன் மட்டும் இருந்தாலோ போதாது.
தத்துவம் இருக்க வேண்டும். அந்த தத்துவம் இருக்கின்ற இடம் இந்தியாவிலேயே ஒரு இடம் தமிழ்நாடு மட்டும் தான். பெரியார், அண்ணா, கலைஞர் புகட்டிய நமது திராவிட தத்துவம் மோடியை வீழ்த்தக்கூடிய சரியான ஆயுதம். மோடி எனும் ஆரிய மாடலை பெரியாரின் திராவிட மாடலால் தான் வீழ்த்த முடியும் என என்றார்.
மேலும், பாலின சமத்துவத்தை உருவாக்குவதற்காக, பெண்களின் பங்களிப்பை ஆண்கள் உணர வேண்டும், மதிக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின் என ஆ.ராசா பேசியுள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.