திருச்சியில் நடைபெற்ற வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளர் திமுக எம்.பி.ஆ.ராசா பேசுகையில்;- பெண் என்றால் பேய் கூட இரங்கும் பேய் கூட இரங்க வேண்டிய பெண்மைக்காக மோடி இரங்கவில்லை என்றால் பேயைவிட மோசமானவரா என்று கேள்வி இன்றைக்கு இந்தியாவில் எழுந்துள்ளது.
ஒரு பக்கம் ஊழல், ஒரு பக்கம் எதேச்சரிகாரம், மற்றொரு பக்கம் மதவாதம். இவை எல்லாம் சேர்ந்த பாஜக திமுகவை பார்த்து சொல்கிறது இது ஊழல் கட்சி, குடும்ப ஆட்சி என்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்திருக்கிற அரசியல் களம்தான் பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பப் போகிறது.
மோடியை எதிர்த்து வட மாநிலங்களில் ஒரு பெரும் படையே திரண்டு கொண்டிருக்கிறது. ஆனால் மோடி என்ற மதவாதத்தை வீழ்த்த வேண்டும் என்றால் படை மட்டும் இருந்தாலோ அல்லது தலைவன் மட்டும் இருந்தாலோ போதாது.
தத்துவம் இருக்க வேண்டும். அந்த தத்துவம் இருக்கின்ற இடம் இந்தியாவிலேயே ஒரு இடம் தமிழ்நாடு மட்டும் தான். பெரியார், அண்ணா, கலைஞர் புகட்டிய நமது திராவிட தத்துவம் மோடியை வீழ்த்தக்கூடிய சரியான ஆயுதம். மோடி எனும் ஆரிய மாடலை பெரியாரின் திராவிட மாடலால் தான் வீழ்த்த முடியும் என என்றார்.
மேலும், பாலின சமத்துவத்தை உருவாக்குவதற்காக, பெண்களின் பங்களிப்பை ஆண்கள் உணர வேண்டும், மதிக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின் என ஆ.ராசா பேசியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.