தலைக்கேறிய போதையினால் விமானத்தில் இருந்து முதலமைச்சர் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருப்பவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான். இவர், முதல்முறையாக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனை அவரே பல மேடைகளில் சொல்லியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, குடிபழக்கத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதேவேளையில், ஆம்ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஷிரோமணி அகாலி தள தலைவர் சுக்பிர் சிங் பாதல் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மீது குற்றஞ்சாட்டி உள்ளார். அதில், ‘விமானத்தில் நன்றாக குடித்து விட்டு போதையில் இருந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டார்.
லுப்தான்சா விமானத்தில் அதிக போதையில் நடக்க கூட முடியாமல் பகவந்த் இருந்துள்ளார் என சக பயணிகள் கூறிய தகவல் தற்போது ஊடகங்களில் வெளி வந்துள்ளது. இதனால், விமானம் 4 மணி நேரம் தாமதமாக சென்றது. இதன்மூலம் பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய மாநாட்டுக்கு கலந்து கொள்ள முடியவில்லை.
இது உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபியர்களுக்கு ஏற்பட்ட தலைகுனிவு ஆகும்.இந்த தகவலை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனிடேய, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் குடிபோதையில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறியதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதையும் படியுங்க: சண்ட போட்டு…
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
This website uses cookies.