ஜவுளிக்கடைக்கு சென்று விட்டு திரும்பிய 28 வயது இளம்பெண்ணின் ஆடைகளை நீக்கி நிர்வாணமாக நிற்க வைத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு ஆந்திர மாநிலம் ஐதராபாத் ஜவகர் நகர் பகுதியில் இருக்கும் துணிக்கடையில் இருந்து 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வெளியே வந்துள்ளார். அப்போது, அந்த வழியில் மதுபோதையில் மாரய்யா (38) என்பவர் நின்று கொண்டிருந்தார்.
அவர் அந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த இளம்பெண், மாரய்யாவை தாக்க முற்பட்டார். பதிலுக்கு ஆத்திரமடைந்த மாரய்யா, இளம் பெண்ணின் ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கினார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற பெண் ஒருவர் இந்த சம்பவத்தை கண்டு வாலிபரை தடுக்க முயற்சித்தார். அவரையும் வாலிபர் தாக்கினார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட இளம்பெண் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியம் குடிபோதையில் இருந்த மாரய்யா, அவரை சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக நடைபாதையில் நிர்வாணமாக நிற்க வைத்தார். அதோடு, பாலியல் தொந்தரவும் கொடுத்தார். இதனை தடுக்காமல் அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன் வரவில்லை.
இதையடுத்து, போதை ஆசாமி அங்கிருந்து கிளம்பியதும், சிலர் அருகில் இருந்த பிளக்ஸ் பேனர்களை எடுத்து அந்த இளம்பெண்ணை மூடினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி, மாரய்யாவை கைது செய்தனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.