ஜவுளிக்கடைக்கு சென்று விட்டு திரும்பிய 28 வயது இளம்பெண்ணின் ஆடைகளை நீக்கி நிர்வாணமாக நிற்க வைத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு ஆந்திர மாநிலம் ஐதராபாத் ஜவகர் நகர் பகுதியில் இருக்கும் துணிக்கடையில் இருந்து 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வெளியே வந்துள்ளார். அப்போது, அந்த வழியில் மதுபோதையில் மாரய்யா (38) என்பவர் நின்று கொண்டிருந்தார்.
அவர் அந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த இளம்பெண், மாரய்யாவை தாக்க முற்பட்டார். பதிலுக்கு ஆத்திரமடைந்த மாரய்யா, இளம் பெண்ணின் ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கினார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற பெண் ஒருவர் இந்த சம்பவத்தை கண்டு வாலிபரை தடுக்க முயற்சித்தார். அவரையும் வாலிபர் தாக்கினார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட இளம்பெண் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியம் குடிபோதையில் இருந்த மாரய்யா, அவரை சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக நடைபாதையில் நிர்வாணமாக நிற்க வைத்தார். அதோடு, பாலியல் தொந்தரவும் கொடுத்தார். இதனை தடுக்காமல் அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன் வரவில்லை.
இதையடுத்து, போதை ஆசாமி அங்கிருந்து கிளம்பியதும், சிலர் அருகில் இருந்த பிளக்ஸ் பேனர்களை எடுத்து அந்த இளம்பெண்ணை மூடினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி, மாரய்யாவை கைது செய்தனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.