மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் கெஜ்ரிவால் ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும் படிக்க: மெத்தனம் காட்டும் தமிழக அரசு… நானே தரையில் அமர்ந்து போராடுவேன்; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம்…!!!
இந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் கெஜ்ரிவால் ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், லஞ்சம் அளித்தவருக்கு ரூ.195 கோடி கமிஷன் கிடைக்கும் வகையில் மதுபான கொள்கையில் திருத்தம் செய்ததாகவும், மதுபான கொள்கை முறைகேடு நடந்த போது 170 செல்போன்களை கெஜ்ரிவால் பயன்படுத்தியுள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
இதன்காரணமாகவே, அவரது செல்போனின் பாஸ்வேர்டை தர மறுத்து வருவதாகவும், கெஜ்ரிவாலின் கைதுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.