10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்.. ஜம்மு காஷ்மீரில் கணக்கை தொடங்க ராகுல் காந்தி வியூகம் : கூட்டணி அறிவிப்பு!
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்துரையாடினர்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது:- ஜம்மு காஷ்மீரில் மாநில அந்தஸ்தை விரைவில் மீட்டெடுப்பதே எங்களின் முன்னுரிமை.
இந்தியா கூட்டணியின் முன்னுரிமையும் இதுதான். தேர்தலுக்கு முன்பே இதை செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். இருந்தாலும் பரவாயில்லை. இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மாநில அந்தஸ்து மீட்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீட்டெடுக்கப்படும் என்று நம்புகிறோம்.
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் எனக்கும் இடையே மிக ஆழமான உறவு உள்ளது. இங்கு வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு உதவ காங்கிரஸ் எப்போதும் துணைநிற்கும். நீங்கள் (மக்கள்) மிகவும் கடினமான, கடினமான காலகட்டத்தை கடந்து செல்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் வன்முறையை அகற்ற விரும்புகிறோம்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, ஒரு மாநிலமானது யூனியன் பிரதேசமாக அந்தஸ்து குறைக்கப்பட்டது இங்குதான். இதற்கு முன்னர் இப்படி நடந்ததில்லை. யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக மாறியுள்ளன, ஆனால் ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாறியது இதுவே முதல் முறை.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை திரும்ப பெறுவதற்கு நாங்கள் முன்னுரிமை அளிப்போம்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.