குஜராத்தில் விவசாயியை ஏமாற்றி ரூ.10 கோடி தேர்தல் பத்திரம் பெறப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் அன்ஜார் பகுதியைச் சேர்ந்த பட்டியலின விவசாயி குடும்பத்தின் பெயரில், கடந்த ஆண்டு 2023 அக்டோபர் 11 ஆம் தேதி ரூ.11.14 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கப்பட்டுள்ளது. அதில், பாஜகவுக்கு ரூ.10 கோடியும், சிவசேனாவுக்கு ரூ.1.14 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணமானது, அதானி குழுமத்துடன் தொடர்புடைய வெல்ஸ்பன் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் வழங்கியுள்ளது.
நிலத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டிய தொகையை நேரடியாக வழங்கினால் வரி பிரச்னை வரும் என்றும், அதனால் இப்படி வழங்குவதாகவும், தேர்தல் பத்திரம் வழியாக வாங்கினால் சில ஆண்டுகளில் 1.5 மடங்காக பணம் திரும்ப கிடைக்கும் என்று அந்த விவசாய குடும்பத்திடம் வெல்ஸ்பன் என்டர்பிரைசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: ஓட்டுக்காக நடத்தும் நாடகம்… இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாதது ஏன்..? CM ஸ்டாலினுக்கு வானதி கேள்வி..!!
இதனை நம்பிய விவசாயி குடும்பத்தினர், அந்நிறுவனத்தினர் ஏமாற்றிவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், சம்பந்தபப்ட்ட நிறுவன மேலாளர், பாஜக மாவட்ட நிர்வாகி டேனி ரஜினிகாந்த் ஷா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
This website uses cookies.