முறைகேடு வழக்கில் அமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளும் கட்சி எம்பி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு டெல்லியில் புதிய மதுபான கொள்கையை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்தார். அதன்படி, மதுபாட்டில்களின் சில்லறை விற்பனையை தனியாரிடம் வழங்குவதுதான். இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என மாநில அரசு கூறியது.
இந்த புதிய கொள்கையை அமல்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தன. டெல்லி தலைமை செயலரின் பரிந்துரையின் பேரில் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கெ. சக்ஸேனா, சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் சிபிஐயுடன் அமலாக்கத்துறையும் இணைந்து விசாரணையை தொடங்கியது. அதில், துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா கைதாகி, சிறையில் உள்ளார்.
இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்குடன், இணைக்கப்பட்ட பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இல்லத்தில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதை அறிந்து, அவரது வீட்டு முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன்,
சஞ்சய் சிங் அமலாக்க இயக்குநரக அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
முறைகேடு வழக்கில் துணை முதலமைச்சர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆளும்கட்சியின் எம்பியும் கைதாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
This website uses cookies.