டெல்லி : ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார்.
தெலங்கானா மாநிலம் பிரிப்பதற்கு முன்பாக ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதலமைச்சராக இருந்தவர் நல்லாரி கிரண்குமார் ரெட்டி. காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதலமைச்சராக பதவி வகித்த அவர், அக்கட்சியில் இருந்து விலகினார்.
இதைத் தொடர்ந்து, தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதையடுத்து, மக்கிய ஆந்திரா (ஒருங்கிணைந்த ஆந்திரா) என்ற கட்சி தொடங்கி ஆந்திர மாநிலம் முழுவதும் போட்டியிட்டார். ஆனால், ஒரு இடத்தில் கூட் வெற்றி பெற முடியவில்லை. அதன் பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இதனிடையே, மீண்டும் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாகவும், தென்னிந்திய அளவில் அவருக்கு உயர்பொறுப்பு கொடுக்க இருப்பதாக ஆந்திர அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரண் குமார் ரெட்டி, பாஜகவில் இணைந்துள்ளார். இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.