₹3.5 கோடிக்கு முட்டை பப்ஸ் வாங்கியதாக செலவு கணக்கு.. முன்னாள் முதலமைச்சரால் சர்ச்சை!

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ஆட்சியில் பொதுமக்களின் பணத்தை வீணடித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஜெகன் மோகன் முதல்வராக இருந்த போது வீட்டை விட்டு வெளியே வந்தால் ஒரு ஹெலிகாப்டரும் நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்களும் இருக்க வேண்டும்.
மாவட்டங்களுக்கு சுற்று பயணம் சென்றால் பள்ளிகளை மூட வேண்டும்.

அந்த பகுதியில் சாலைகளில் போக்குவரத்து மாற்றம், மரங்களை வெட்ட வேண்டும். ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு வளையமாக இருக்க வேண்டும்.

யாரும் பார்க்காத வகையில் சாலையின் இருப்புறமும் திரைகள் கட்டப்பட வேண்டும். பொது மக்கள் கூட்டத்தை காண்பிக்க பல நூறு கிலோமிட்டர் தொலைவில் இருந்து ஆர்டிசி பேருந்துகள் மூலம் பொது மக்களை அழைத்து செல்லப்பட்டனர்.

இதனால் ஐந்தாண்டுகளாக பல விதமான விமர்சனங்கள் வந்தாலும் அவற்றை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் 2019 ம் ஆண்டு முதல் 2024 வரை ஜெகன்மோகன் ரெட்டி சொந்த வீடாக தாடேபள்ளி பேலஸ் இருந்தாலும் அதுவே முதல்வரின் முகாம் அலுவலகமாக செயல்பட்டு வந்தது.

இங்கு எக் பப்ஸ் ( முட்டை பப்ஸ் ) செலவமாக மட்டும் ஆண்டுக்கு ₹ 72 லட்சத்து 51 ஆயிரத்து 340 என ஐந்து ஆண்டுகளுக்கு ₹ 3 கோடியே 62 லட்சத்து 56 ஆயிரத்து 700 செலவு காண்பிக்கப்பட்டுள்ளது.

இதுதவீர டிபன், காபி இதர செலவுகள் தனி என சமூக வலைதளங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்டு பதிவு செய்துள்ளனர்.

இதனால் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயரை ஒரே இரவில் எக் பஃப்ஸ் ரெட்டி என தெலுங்குதேசம் கட்சி மாற்றி குறிப்பிட்டு சமூக வளைதளத்தில் பரப்பி வருகிறது.

2014 மற்றும் 2019 க்கு இடைப்பட்ட காலத்தில் சந்திரபாபு முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த நாரா லோகேஷின் ஸ்கேஸ் பற்றி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது.

இப்போது ஜெகன் மோகனை பஃப்ஸ் ரெட்டியை அழைத்து தெலுங்கு தேசம் கட்சி அதற்கு எதிராக பிரச்சாரம் செய்யத் தொடங்கி உள்ளது. ஜெகன் மோகன் வீடு ஐந்து ஆண்டுகளில் முதல்வர் முகாம் அலுவலகம் என்பதால் இங்கு நூற்றுக்கணக்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.

பொதுவாக டீயுடன் ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஐந்து ஆண்டுகளில் ₹ 3.5 கோடி எக் பஃப்ஸ் செலவு காட்டியது விமர்சனத்துக்கு உள்ளாகிறது.

ஒரு நாளைக்கு 1000 முட்டை பப்ஸ் என்றால் தாடேபள்ளி ஜெகன் மோகன் பேலஸ் முட்டை பஃப் ஊழல் அதிர்ச்சியளிக்கிறது.

மாதத்திற்கு 30,000 முட்டை பஃப்ஸ் வரை சாப்பிட்டார்கள் என்ற வாதம் முன்னுக்கு வந்துள்ளது. ஜெகன் மோகன் ஆட்சியில் அனைத்து துறையிலும் ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில் உணவுப் பொருட்களை கடைசியில் விட்டு வைக்கவில்லை.

இது குறித்து கூட்டணி அரசு விரிவான விசாரணை நடத்தினால் மேலும் பல உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளதாக பலர் கூறுவருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

10 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

11 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

11 hours ago

This website uses cookies.