பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக பகவந்த் மான் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள முதலமைச்சர் பகவந்த் மான் வீடு அருகே இன்று வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 4.30 மணியளவில் பகவந்த் மான் வீடு அருகே உள்ள மாந்தோப்பில் இந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை மாந்தோப்பில் வேலை செய்து வந்த நபர் கண்டுபிடித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடம் முதலமைச்சர் பகவந்த் மான் வீடு மற்றும் அவர் பயன்படுத்தும் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைந்துள்ள இடத்திற்கு மிக அருகே ஆகும்.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார், பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சமயம் முதல்-மந்திரி பகவந்த் மான் அந்த வீட்டில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.