மத்தியபிரதேச மாநிலம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளியான தஷ்ரத் ரவத் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் பர்வேஷ் சுக்லா என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து பர்வேஷ் சுக்லாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், அவரின் வீட்டின் ஒரு பகுதியை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்தனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட பழங்குடியின தொழிலாளியை மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகார் தனது இல்லத்திற்கு வரவழைத்து அவரது பாதங்களை கழுவி மன்னிப்பு கோரியதோடு, இந்த விவகாரத்தில் குற்றவாளி மீது தேசியபாதுகாப்பு சட்டம் பாயும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பர்வேஷ் சுக்லா தனது தவறை உணர்ந்து விட்டதாகவும், அவரது தவறுக்காக ஏற்கனவே தண்டிக்கப்பட்டு விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பழங்குடியின தொழிலாளி தஷ்ரத் ரவத் தெரிவித்துள்ளார். மேலும் பர்வேஷ் சுக்லா தங்கள் கிராமத்தின் பண்டிதராக இருப்பவர் என்றும், அவரை அரசு மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.