ஆந்திரா : குண்டூர் ராமர் கோவில் முன்பு இருந்த கொடி மரத்தை வேறு இடத்திற்கு மாற்றி வைக்க முயற்சிசெய்தபோது கொடி மரம் துண்டாகி கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பண்டிதிவாரி பாலம் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தக் கிராமத்தில் உள்ள பழமையான ராமர் கோவில் முன்பு, 40 டன் எடையுள்ள 44 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன கொடி மரம் ஒன்று இருந்தது. கடந்த 1963ல் அமைக்கப்பட்டதால் அந்த கொடி மரம் பழசாகியிருந்தது. இதையடுத்து புதிதாக கொடி மரம் வைப்பதற்காக அந்த பழைய கொடி மரம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
ராட்சத கிரேன் உதவியுடன் இந்த கொடிமரம் மாற்றும் நிகழ்ச்சியில், ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், பழைய கொடி மரத்தை தூக்கியபோது திடீரென்று, கொடி மரத்தின் மேல் பகுதி உடைந்து, அதன் பெரியத் துண்டுஇ தரையில் பக்தர்கள் எதிர்பாராத நேரத்தில் விழுந்தது. கொடிமரம் இடிந்து விழுந்தபோது, அதை சுற்றி நின்ற பக்தர்கள்இ அங்கிருந்து தப்பித்து ஓடியதால், அதிர்ஷ்டவசமாக காயமின்றி அனைவரும் உயிர் தப்பினர். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.