சர்ச்சைக்குரிய இயக்குநராக வலம் வருபவர் தெலுங்கு மற்றும் இந்தி பட இயக்குநர் ராம் கோபால் வர்மா. இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் கோப்பட சேகர் ராஜு பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா மீது மோசடி புகார் கொடுத்திருக்கிறார்.
ஐதராபாத் அருகே 2019-ம் ஆண்டு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்பாக `திஷா’ என்ற பெயரில் படம் தயாரிக்க ராம் கோபால் வர்மாவிற்கு ராஜூ 2020-ம் ஆண்டு முதலில் 8 லட்சமும் அடுத்த சில நாட்களில் மேலும் 20 லட்சமும் கொடுத்தார்.
படம் வெளியாவதற்கு முன்பு பணத்தைக் கொடுத்துவிடுவதாக ராம் கோபால் வர்மா உறுதியளித்திருந்ததாக ராஜு தனது புகாரில் தெரிவித்திருக்கிறார். ஆனால் 2021-ம் ஆண்டுதான் ராம் கோபால் வர்மா படமே தயாரிக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன். படம் தயாரிப்பதாகக்கூறி பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார் என்று தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அப்புகாரின் அடிப்படையில் ஐதாராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மோசடி, நம்பிக்கையை மீறியது உட்பட பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.