கேரளா மாநிலத்தின் பிரபல பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாவா சுரேஷ் தனது டிரைவருடன் செங்கனூர் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கேரளா அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் – கொல்லம் நெடுஞ்சாலையில் தட்டத்துமலை என்ற பகுதியில் வைத்து ,கவன குறைவாக சாலையின் ஓரத்தில் இருந்து வந்த கார் ஒன்றை இடிக்காமல் இருப்பதற்காக – வாவா சுரேஷ் இன் டிரைவர் காரை வளைக்க முயன்ற போது கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த கேரளா அதி விரைவு அரசு பேருந்து கார் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் வாவா சுரேஷுக்கும் அவரது டிரைவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் இருவரையும் மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பாம்பு கடித்ததில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.