ஆந்திரா : ஆர்ஆர்ஆர் திரைப்படம் சிறப்புக் காட்சியைக் காண இருசக்கர வாகனத்தில் வந்த ரசிகர்கள் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
ஆந்திர மாநிலம் வி கோட்டா மண்டலம் மற்றும் ரமகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் துர்கா (வயது 25), கங்காதர் (வயது 24), வினய் குமார் (வயது 26) ஆகியோர். தமிழ்நாட்டில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியான நிலையில் நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் தீவிர ரசிகர்களான இவர்கள் திரைப்படத்தை காண 2 இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு ஆந்திரா வந்துகொண்டிருந்தனர்.
வி கோட்டா மண்டலத்திலிருந்து தமிழ்நாடுக்கு செல்லும் சாலையில் பாபே பள்ளி மிட்டா என்ற இடத்தில் இரவு 12 மணி அளவில் இரு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று உரசி மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழக்க மற்ற மூன்றுபேரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குப்பம் பி.இ.எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆர்ஆர்ஆர் படம் பார்க்க ஆவலுடன் வந்த ரசிகர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
This website uses cookies.