ஆந்திர மாநிலம் தலைநகர் அமராவதிக்காக சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது நிலம் வழங்கிய விவசாயிகள் தொடர்ந்து அமராவதியை தலைநகராக அமைக்க வலியுறுத்தி இரண்டாவது கட்டமாக நிலம் வழங்கிய விவசாயிகள் அனைவரும் இணைந்து மாநிலம் முழுவதும் மகா பாத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பாத யாத்திரை கிழக்கு கோதாவரி மாவட்டம், கொவ்வூரில் இருந்து ராஜமகேந்திராவரம் சென்று கொண்டுருந்தபோது காமன் இந்தியா பாலத்தை கடக்கும்போது விவசாயி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் பி.வி. திரிநாத் மாரடைப்பு ஏற்படும் நோய்களுக்கு உடனடி முதலுதவியான சிபிஆர் செய்தார். அவருடன் மற்ற போலீசாரும் உதவி செய்து முழு முயற்சியுடன் அவரது உயிரைக் காப்பாற்றினார்.
மாரடைப்பில் மயங்கி விழுந்த விவசாயிக்கு துரிதமாக செயல்பட்டு சிபிஆர் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய இந்த சம்பவம் அங்கிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக மாறி வருவதோடு காவல்துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது .
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.