புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பறிபோன விவசாயி உயிர் : கிராம மக்கள் மறியலால் தமிழக எல்லையில் போக்குவரத்து பாதிப்பு!!

ஆந்திரா : விளைநிலத்தில் காவலுக்கு இருந்த விவசாயி யானை மிதித்து பலியான நிலையில் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் நீதி கேட்டு சாலை மறியல் செய்ததால் ஆந்திரா தமிழகம் இடையே போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் குடியாத்தம் சாலையில் விளைநிலத்தில் காவலுக்கு இருந்த விவசாயி சுப்பிரமணியம் ஒற்றை யானை மிதித்து பலியானார்.

விளைநிலத்தை காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இன்று அதிகாலை அவ்வழியாக வந்த ஒற்றை யானை சுப்பிரமணியன் மீது தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் படுகாயமடைந்த சுப்ரமணியம் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் சுப்ரமணியம் பலியானதற்கு நீதி கேட்டும் உடனடியாக சோலார் தடுப்பு வேலி அமைத்துத் தரக் கோரியும் சடலத்துடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக பலமனேர் தமிழ்நாடு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

10 hours ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

11 hours ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

12 hours ago

சமையல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு.. சாமானிய மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…

12 hours ago

கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…

12 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

13 hours ago

This website uses cookies.