ஆந்திரா : விளைநிலத்தில் காவலுக்கு இருந்த விவசாயி யானை மிதித்து பலியான நிலையில் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் நீதி கேட்டு சாலை மறியல் செய்ததால் ஆந்திரா தமிழகம் இடையே போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் குடியாத்தம் சாலையில் விளைநிலத்தில் காவலுக்கு இருந்த விவசாயி சுப்பிரமணியம் ஒற்றை யானை மிதித்து பலியானார்.
விளைநிலத்தை காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இன்று அதிகாலை அவ்வழியாக வந்த ஒற்றை யானை சுப்பிரமணியன் மீது தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் படுகாயமடைந்த சுப்ரமணியம் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் சுப்ரமணியம் பலியானதற்கு நீதி கேட்டும் உடனடியாக சோலார் தடுப்பு வேலி அமைத்துத் தரக் கோரியும் சடலத்துடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக பலமனேர் தமிழ்நாடு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.