ராஜஸ்தானின் பந்தி மாவட்டத்தில் சிலார் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் பவன் வைராகி. இவரது தந்தை ரமேஷ் வைராகி. பவனுக்கு திருமணம் நடந்து அந்த தம்பதிக்கு 6 மாத குழந்தை உள்ளது.
இந்த நிலையில், மகனின் மனைவி மீது ரமேசுக்கு ஓரப்பார்வை இருந்து உள்ளது. இதனால், அவரிடம் பேசி, பேசி தன்பக்கம் ஈர்த்து விட்டார்.
பவனின் மனைவியும், மாமனாரின் பேச்சை கேட்டு மயங்கி விட்டார். இந்த சூழலில், சதர் காவல் நிலையத்தில் பவன் வைராகி பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார்.
அதில், பிறந்து 6 மாதம் ஆன தனது மகளையும், தன்னையும் தனியாக விட்டு விட்டு, தந்தை ரமேசுடன் மனைவி ஓடி விட்டார். ஒன்றுமறியாத அப்பாவியான தனது மனைவியை வசீகரித்து இழுத்து சென்று விட்டார்.
எப்படி தனது மனைவியை தன்வசப்படுத்தினார் என தெரியவில்லை. ஆனால் நிச்சயம், அவரது வற்புறுத்தல் இல்லாமல் தனது மனைவி இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார் என புகாரில் தெரிவித்து உள்ளார்.
வேலை நிமித்தமாக பவன் பக்கத்து கிராமத்திற்கு சென்று தங்கி இருக்க வேண்டி இருந்து உள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது என கூறப்படுகிறது.
அந்த புகாரில், தனது தந்தை ரமேஷ் சட்டவிரோத வேலையில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தன்னுடைய இரு சக்கர வாகனம் ஒன்றையும் திருடி சென்று விட்டார் என தெரிவித்து உள்ளார்.
போலீசாரும், இந்த வழக்கில் தீவிர கவனம் செலுத்தவில்லை என பவன் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். ஆனால் இதனை மறுத்த போலீசார், ரகசிய திருமணம் செய்ய ஓடிப்போன அந்த ஜோடியையும், திருடு போன இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றையும் நாங்கள், கண்டறியும் தீவிர முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள் எங்கே? என தேடி வருகிறோம். ஆனால், அவர்கள் இன்னும் சிக்கவில்லை என கூறியுள்ளனர்.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.