திருப்பதி: ஆந்திரா கோதாவரி நதியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை சினிமா பாணியில் படகில் விரைந்து மீட்டு காப்பாற்றிய மீனவர்கள்.
கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்தியில் குடும்ப தகராறு காரணமாக துடால நாகலட்சுமி (40) பெண் ரயில் பாலத்தில் இருந்து கோதாவரியில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
நாகலட்சுமி கோதாவரி நதியில் குதித்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கவனித்த உள்ளூர் மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் உடனடியாக களத்தில் இறங்கி அங்கிருந்த
மீனவர்களின் உதவியுடன் நாகலட்சுமி மீன்பிடி படகுமூலம் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, அறிவுரை கூறி உறவினர்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது ஒரு தீர்வாகாது என அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறியும் இதுக்காகவா திருமணம் செய்து கொண்டாய் என்று கேள்வி எழுப்பும் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
தகவல் கிடைத்த உடன் விரைந்து செயல்பட்டு வேகமாக நடவடிக்கை எடுத்து பெண்ணின் உயிரை காப்பாற்றிய போலீசாருக்கு போலீஸ் உயரதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.