நடிகையுடன உல்லாசம்.. திருமணம் செய்வதாக கூறி மோசடி.. தொழிலதிபரை காப்பாற்றிய முன்னாள் CM? ஆட்சி மாற்றத்தால் அம்பலம்!

மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் ஜெ.எஸ்.டபுள்யூ நிறுவனத்தின் தலைவரான சஜ்ஜன் ஜிண்டால் மீது மும்பையில் கடந்த டிசம்பர் மாதம் 30 வயதான குஜராத்தை சேர்ந்த நடிகை காதம்பரி நரேந்திரகுமார் ஜேத்வானி வழக்கு தொடர்ந்தார்.

இதில் சஜ்ஜன் ஜிண்டால் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

இந்த புகாரில் சஜ்ஜன் ஜிண்டால் எப்படி அறிமுகமானார்… எப்படி ஏமாற்றினார் என்று இந்தப் புகாரில் காதம்பரி விளக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து வெளியே வர சஜ்ஜன் ஜிண்டாலின் நெருங்கிய நண்பரான அப்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை தொடர்பு கொண்டுள்ளார்.

இதனையடுத்து ஜெகன் மோகன் உத்தரவுப்படி அப்போதைய அரசு ஆலோசகர் சஜ்ஜல ராமகிருஷ்ணா ரெட்டி விஜயவாடாவின் அப்போதைய காவல் ஆணையராக இருந்த கிராந்தி ரானா டாடாவிடம் நடிகை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து விஜயவாடாவை சேர்ந்த குக்கலா வித்யாசாகர் என்ற தொழிலதிபர் மூலம் போலி ஆவணங்கள் கொடுத்து ₹ 5 லட்சம் பணம் பெற்று நடிகை காதம்பரி நரேந்திர குமார் ஜெத்வானி மோசடி செய்ததாக புகாரின் அடிப்படையில்
மும்பையில் சஜ்ஜன் ஜிண்டால் மீது வழக்குப்பதிவு செய்த நடிகை காதம்பரி நரேந்திர குமார் ஜெத்வானி குடும்பத்தினரை கடந்த ஜனவரி மாதம் விஜயவாடா போலீசார் மும்பை சென்று தீவிரவாதிகளை கைது செய்ய போவது போல் பெரும் படையுடன் மும்பை சென்று கைது செய்து அழைத்து வந்தனர்.

பின்னர் ஒரு விருந்தினர் மாளிகையில் பதினெட்டு நாட்கள் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டார். பின்னர் பிப்ரவரி 2 ம் தேதி போலீசார் கைது செய்ததாக காண்பித்து எப்.ஐ.ஆர். பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

சில நாட்களுக்குப் பிறகு போலீசார் தொடர் அழுத்தம் காரணமாக வழக்கை வாபஸ் வாங்க ஒப்பு கொண்டதால் போலீசாரே வழக்கறிஞர் வைத்து நடிகை குடும்பத்திற்கு ஜாமீன் பெற்று கொடுத்தனர்.

ஜாமினில் வெளியே வந்த நடிகை மார்ச் மாதம் மும்பை போலீசில் சஜ்ஜன் ஜிண்டால் மீதான வழக்கை வாபஸ் பெற்றார்.

அந்த வழக்கு… இந்த வழக்கின் நடுவில் என்ன நடந்தது என்ற நிலையில் சினிமா படத்தின் கதையை போன்று தற்போது 7 மாதங்களுக்கு பிறகு வெளியே தெரிய வந்துள்ளது.

ஆனால் மும்பையில் இருந்து நடிகை ஒருவரின் குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட விவகாரம் அப்போதைய கமிஷனர் கிராந்தி ராணா டாடா முன்னிலையில் நடந்ததால் இந்த விவகாரம் யாருக்கும் ஊடகங்களுக்கு தெரியாமல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இந்த விவகாரம் தற்போது வெளியாகி உள்ள நிலையில் உண்மைகளை கண்டறிய வேண்டும்.

ஆந்திர போலீசார் பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்துச் நடந்த உண்மையைச் கேட்டறிந்து எத்தனை மூத்த அதிகாரிகள் சம்மந்தப்பட்டாலும் அவர்களை விட்டு வைக்கக் கூடாது.

காவல்துறை மாஃபியா செயல்களில் ஈடுபட்டால் சாமானியர்களை நிலை என்ன என்று கேள்வி சமூக வளைதளத்தில் பரவியது.

இதுகுறித்து விஜயவாடா தற்போதைய காவல் ஆணையர் ராஜசேகர் பாபு கூறுகையில் இது குறித்து எந்த வித புகாரும் வரவில்லை பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் இது குறித்து உண்மை கண்டறிந்து விசாரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அக்கட தேசத்து நடிகையுடன் ஊர் சுற்றும் தனுஷ்.. வைரலாகும் வில்லங்கமான போட்டோஸ்!

பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…

15 minutes ago

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்- பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை போட்டுடைத்த உதவி இயக்குனர்

கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…

18 minutes ago

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

48 minutes ago

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

1 hour ago

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

2 hours ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

2 hours ago

This website uses cookies.