டாட்ராசின் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் கலந்திருப்பது கண்டறியப்பட்டதால், கோழிக்கோடு மாவட்டத்தில் மிக்சர் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு: சில மாதங்களுக்கு முன்பு, ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து, ரசாயனம் கலந்து தயாரிக்கப்படும் பஞ்சு மிட்டாய், சிக்கன் வகைகளுக்கும் தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. அது மட்டுமல்லாமல், இவ்வாறான அறிவிப்புக்குப் பிறகு உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனைகளையும் மேற்கொண்டனர். இதில் டன் கணக்கிலான கெட்டுப்போன இறைச்சியும் சிக்கி, அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் பலராலும் விரும்பி உண்ணப்படும் மிக்சர் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தின் வடகரா, பெரம்ப்ரா, கொடுவல்லி மற்றும் திருவம்பாடி வட்டாரங்களில் மிக்சர் மாதிரிகளை உணவு பாதுகாப்புத் துறையினர் சேகரித்துள்ளனர். பின்னர், இதனை சோதனைக்கு உட்படுத்தியதில் அதில் டார்ட்ராசின் (tartrazine) எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பதாக கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நான்கு இடங்களில் உள்ள ஸ்வீட் மற்றும் பேக்கரி கடைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உணவு பாதுகாப்புத் துறை எடுத்துள்ளது. மேலும், கோழிக்கோடு மாவட்டத்தில் மிக்சர் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது.
இதையும் படிங்க: நீங்க தினமும் சாப்பிடுற உணவு இப்படித்தான் இருக்கணும்… அறிவுரை கூறும் உலக சுகாதார மையம்!!!
டார்ட்ராசின் என்பது உணவுப் பொருட்கள் மட்டுமின்றி நூல் மற்றும் பட்டுகளிலும் நிறமூட்டிகளாக சேர்க்கப்படுகிறது. பெரும்பாலும், மஞ்சள் நிறத்தை உருவாக்குவதற்கு இந்த டாட்ராசின் வேதிப்பொருள் பயன்படுகிறது. எனவே தான், தேர்ந்தெடுக்கப்பட்ட மிக்சர் மாதிரிகள் அடர் மஞ்சள் நிறத்தில் பார்ப்பதற்கு பளீர் நிறத்தில் காணப்படுகிறது என உணவு பாதுகாப்புத் துறை துணை ஆணையர் ஏ.ஜாகீர் உசேன் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி…
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
This website uses cookies.