தனது கான்வாயை காட்டு யானை வழிமறித்ததால் உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் பாறை மீது உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், கர்வால் மாவட்டத்திற்கு கோட்வார்-துகாடா நெடுஞ்சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காட்டு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென அவர்களின் கான்வாயை ஒற்றை காட்டு யானை வழிமறித்தது.
சிறிது நேரம் அங்கேயே உலாவிய காட்டு யானை, சற்று ஆக்ரோஷமாக காணப்பட்டது. அதுமட்டுமில்லாமல், அவர்களின் வாகனங்களை நோக்கி, அந்த காட்டு யானை ஆவேசமாக வந்தது.
இதனை பார்த்த முன்னாள் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்தை, அவரது பாதுகாவலர்கள் அங்கிருந்த உயர்ந்த பாறையின் மீது அழைத்துச் சென்றனர். அவர்கள் பாதை மீது ஏறிய போதும், அந்தக் காட்டு யானை அவர்களை விட்டு நகரவில்லை. அங்கிருந்தவர்களை அச்சப்படுத்தும் விதமாகவே, காட்டு யானை நின்று கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் மீண்டும் காட்டுக்குள்ளேயே சென்றது. ஆனால் யானையைக் கண்டு பயந்து போன அனைவரும் அங்கிருந்த உயரமான பாறையில் ஏறினர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.