நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் புழு இருந்தது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தினத்தில் ரோஜா பூ எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறோ, அதைப் போல டெய்ரி மில்க் சாக்லேட்டும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். தங்களின் காதலன் அல்லது காதலிக்கு டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கி கொடுத்து தங்களின் அன்பை வெளிப்படுத்துவார்கள்.
எனவே, காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கள், சாக்லேட் விற்பனை களைக்கட்டி வருகிறது. இப்படியிருக்கையில், டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் புழு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த ராபின் சாக்கியஸ் என்பவர் ஆசை ஆசையாக சாப்பிட, ரூ.45 மதிப்பிலான டெய்ரி மில்க் சாக்லேட்டை வாங்கியுள்ளார். அதனை பிரித்து சாப்பிட முயன்ற போது, சாக்லேட்டில் உயிருடன் புழு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்து அதிர்ந்து போன அவர், புழு ஊர்ந்து செல்லும் வீடியோவையும், அமீர்பேட்டை மெட்ரோ நிலையத்தில் உள்ள ரத்னதீப் ரீடெய்ல் ஸ்டோரில் இருந்து ரூ.45 செலுத்தி டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கியதாக அதன் பில்லையும் இணைத்து X தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.