இந்தியா

கேரளாவில் ரயில் மோதி 4 தமிழர்கள் உயிரிழப்பு!

கேரளா, ஷோரனூரில் ரயில் மோதியதில் 4 தமிழர்கள் உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு அருகே ஷோரனூரில் இருக்கும் பாரதப்புழா ஆற்றின் மேல் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த ரயில்வே மேல்பாலத்தில் வழக்கம்போல் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக டெல்லி – திருவனந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில், ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 4 பேர் மீது ரயில் மோதியது.

இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், இது குறித்து அறிந்த ரயில்வே போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்த நான்கு பேரின் உடலையும் மீட்டனர். பின்னர், இது தொடர்பான விசாரணையில் உயிரிழந்த 4 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த வள்ளி, ராணி, லெட்சுமண் உள்ளிட்ட 4 ஒப்பந்த தொழிலாளர்கள் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : அவசர அழைப்பு விடுத்த தவெக.. விஜய் முக்கிய ஆலோசனை.. பரபரக்கும் களம்!

Hariharasudhan R

Recent Posts

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

4 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

5 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

5 hours ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

5 hours ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

6 hours ago

This website uses cookies.