கேரளா, ஷோரனூரில் ரயில் மோதியதில் 4 தமிழர்கள் உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு அருகே ஷோரனூரில் இருக்கும் பாரதப்புழா ஆற்றின் மேல் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த ரயில்வே மேல்பாலத்தில் வழக்கம்போல் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக டெல்லி – திருவனந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில், ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 4 பேர் மீது ரயில் மோதியது.
இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், இது குறித்து அறிந்த ரயில்வே போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்த நான்கு பேரின் உடலையும் மீட்டனர். பின்னர், இது தொடர்பான விசாரணையில் உயிரிழந்த 4 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த வள்ளி, ராணி, லெட்சுமண் உள்ளிட்ட 4 ஒப்பந்த தொழிலாளர்கள் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : அவசர அழைப்பு விடுத்த தவெக.. விஜய் முக்கிய ஆலோசனை.. பரபரக்கும் களம்!
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.