கேரளா, ஷோரனூரில் ரயில் மோதியதில் 4 தமிழர்கள் உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு அருகே ஷோரனூரில் இருக்கும் பாரதப்புழா ஆற்றின் மேல் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த ரயில்வே மேல்பாலத்தில் வழக்கம்போல் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக டெல்லி – திருவனந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில், ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 4 பேர் மீது ரயில் மோதியது.
இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், இது குறித்து அறிந்த ரயில்வே போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்த நான்கு பேரின் உடலையும் மீட்டனர். பின்னர், இது தொடர்பான விசாரணையில் உயிரிழந்த 4 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த வள்ளி, ராணி, லெட்சுமண் உள்ளிட்ட 4 ஒப்பந்த தொழிலாளர்கள் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : அவசர அழைப்பு விடுத்த தவெக.. விஜய் முக்கிய ஆலோசனை.. பரபரக்கும் களம்!
மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம்…
உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…
2026 தேர்தலுக்கு மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தால், அண்ணாமலையை தலைமைப் பொறுப்பில் இருந்து எடுக்க அதிமுக வலியுறுத்தி வருவதாக…
கோவையில், கள்ளக்காதலில் இருந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையை தவிக்கவிட்டு சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம்,…
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒரு மகனான மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…
This website uses cookies.