நாட்டின் 75வது ஆண்டு விடுதலை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி அமித்ஷா தங்களது டுவிட்டரின் முகப்பு புகைப்படங்களை மாற்றியுள்ளனர்.
இந்தியா விடுதலை அடைந்து 75 வருடங்கள் ஆகியுள்ளன. இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் ஓராண்டுக்கு விடுதலை பெருவிழாவாக இதனை கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேசிய அளவில் ஹர் கர் திரங்கா பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி, ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றும்படி அரசு சார்பில் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு, நாட்டின் 75வது ஆண்டு விடுதலை கொண்டாட்டங்களை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்களது டுவிட்டரின் முகப்பு புகைப்படங்களை மாற்றியுள்ளனர்.
அதில், இருந்த பழைய படத்திற்கு பதிலாக நாட்டின் மூவர்ண கொடியை இடம் பெற செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, நாட்டிலுள்ள மக்களும் தங்களது சமூக ஊடகத்தின் முகப்பு பக்கத்தில் தேசிய கொடியை வைக்கும்படி கேட்டு கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஹெச் ராஜா உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகளும் தங்களது DPஐ மாற்றியுள்ளனர். நாட்டின் தேசிய கொடி எனப்படும் மூவர்ண கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.