கர்நாடகா அருகே ஆசனவாயில் ஏர் பிரஷர் பைப் மூலம் காற்று பிடித்து விளையாடிய போது, இளைஞர் ஒருவர் குடல் வெடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் (28) என்பவர் பெங்களூரூவில் தங்கி டெலிவரி ஏஜென்ட்டாக பணிபுரிந்து வருகிறார். அவரது பைக்கை சம்பிகேஹள்ளி பகுதியில் நண்பன் முரளி வேலை செய்யும் சர்வீஸ் சென்டரில் பழுது பார்ப்பதற்காக விட்டுள்ளார்.
அப்போது, நண்பர்கள் இருவரும் ஏ பிரஷர் பைப் மூலம் காற்று அடித்து விளையாடியுள்ளனர். ஒரு கட்டத்தில், முரளி, அந்த பைப்பை எடுத்து யோகேஷின் ஆசன வாயில் வைத்து காற்று பிடித்துள்ளார். இதனால், யோகேஷின் வயிறு பெரிதாகி, குடல் வெடித்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதையடுத்து, அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் போது, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, முரளி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.