தாயை பார்க்க ஆட்டோவில் சென்ற இளம்பெண்…வழிமறித்து கூட்டுபாலியல் வன்கொடுமை செய்த கும்பல்: கொடூர கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..!!

உத்தரபிரதேசம்: ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள தானேபூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை பார்ப்பதற்காக உறவினரின் வீட்டுக்கு கடந்த 23ம் தேதி காலை சென்றுள்ளார்.

பின்னர், இரவில் ஆட்டோ மூலமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 10 மணியளவில் அந்த ஆட்டோவை திடீரென 4 இளைஞர்கள் மறித்துள்ளனர். இதையடுத்து, அந்த இளம்பெண்ணை ஆட்டோவில் இருந்து தரதரவென இழுத்து சென்ற அவர்கள், சாலையோரத்தில் இருந்த புதர் பகுதியில் வைத்து அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பினர்.

இதனைத் தொடர்ந்து, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது உறவினர்களுக்கு அந்தப் பெண் போனில் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, அவரை அவரது உறவினர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்நிலையில், இதுகுறித்து அந்தப் பெண் தற்போது தானேபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

40 minutes ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

40 minutes ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

1 hour ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

2 hours ago

அஸ்திவாரம் தோண்டும் போதே அபசகுணம்.. புதிய கட்டிடத்துக்காக காவு வாங்கிய பழைய கட்டிடம்!

கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…

2 hours ago

This website uses cookies.