தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் கன்கோல் சோதனைச் சாவடியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அவ்வழியாக சென்று கொண்டிருந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் காரில் எதுவும் கிடைக்கவில்லை.
இருப்பினும் போலீசாருக்கு அந்த காரில் சந்தேகம் ஏற்பட்டு டிரைவரிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரண்பாடான பதில் கூறியதில் சந்தேகம் வலுத்தது.
எனவே காரில் ஏதோ இருக்குமோ என்று சந்தேகத்துடன் காரில் இருந்த இருக்கைகளை எடுத்து பார்த்த போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர். ஒவ்வொரு இருக்கையின் கீழும் ஒரு ரகசிய பெட்டி ஏற்பாடு செய்யப்பட்டுருந்தது.
அதை திறந்து பார்த்தபோது அதில் 83.4 கிலோ கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவற்தை ஆந்திரா – ஒடிசா எல்லை மலைகிராமத்தில் இருந்து பெற்து மகாராஷ்டிராவுக்குச் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து காருடன் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹபீஸ் என்பவரை கைது செய்து ₹ 33.50 லட்சம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கஞ்ச கடத்துவதற்காக புஷ்பா பட பாணியில் காரின் இருக்கைக்கு அடியில் ரகசிய அறையை ஏற்படுத்தி கஞ்சா கடத்தினால் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் மேலே இருக்கைகள் போடப்பட்டு கஞ்சா கடத்தியது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது.
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
சூப்பர் ஸ்டார் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எவராவது நேரில் பார்த்தால் மரியாதை தானாக வரும் என்று…
This website uses cookies.