தெலுங்கானா : காதலனுக்காக போதை மாத்திரைகளை கடத்திய தகவை அறிந்த போலீசார் காதல் ஜோடிகளை கைது செய்தனர்.
ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தன்னுடைய காதலன் ஹேமந்த் குமாருக்காக போதை மாத்திரைகள் மற்றும் போதை மருந்து ஆகியவற்றை விமானம் மூலம் கடத்துவதாக விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் போலீசார் விமான நிலையத்திற்கு வெளியே சற்று தொலைவில் அந்த பெண்ணை பிடிப்பதற்காக காத்திருந்தனர். அப்போது கார் ஒன்றில் வந்த அந்த பெண் இறங்கும போது, அதே பகுதியில் தயாராக காத்திருந்த ஹேமந்த் குமார் அந்த பெண்ணிடம் இருந்த 2 கிராம் NAD போதை மருந்து மற்றும் NDMAX போதை மாத்திரைகள் 18 ஆகியவற்றை பெற்றுக்கொண்டார்.
தயாராக காத்திருந்த போலீசார் 2 பேரையும் பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து போதை மருந்து மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் விசாகப்பட்டினம் பகுதியில் போதை மருந்துகளை பயன்படுத்திய வாலிபர்கள் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல் கடந்த 2 மாதத்திற்கு முன் ஹைதராபாத் நகரில் போதை மருந்துகள் பயன்படுத்தி குற்றத்திற்காக பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்திலிருந்து போதை மருந்து மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றை வாங்கி விசாகப்பட்டினம் கடத்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் மூலம் இரண்டு நகரங்களிலும் போதை பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் தற்போதும் துடிப்புடன் செயல்படுவது மீண்டும் உறுதியாகி உள்ளது.
வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…
ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…
கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…
ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…
சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர் சக சீரியல் நடிகரை திருமணம்…
உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
This website uses cookies.