பிரதமர் மோடியின் ஆட்சியில் உலக சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளதாக சீன அரசு அதிகாரப்பூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சீன அரசின் நாளிதழான குளோபல் டைம்ஸில் அந்நாட்டின் பியூடான் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மைய இயக்குநர் சாங் ஜியோடாங் இந்தியா குறித்த கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இந்தியாவின் அரசியல், பொருளாதார மாற்றம் உள்ளிட்டவை அதில் இடம்பெற்றுள்ளது.
அந்த கட்டுரையில், கடந்த 10 ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியா அடைந்த முக்கியத்துவம் பற்றியும், அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாக தனக்கான சொந்த அடையாளத்தை இந்தியா உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் ஆட்சியில் பொருளாதாரம், சமூகம் மற்றும் வெளிநாட்டு கொள்கைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், மிகுந்த தன்னம்பிக்கையுடனும், திட்டமிடலுடனும் உலக அரங்கில் இந்தியா வலம் வந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி மற்றும் நகர்ப்புற கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், உலக நாடுகளுடனான உறவில் சரிசமமான இடத்தை இந்தியா அடைந்து வருவதாகவும் அந்தக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான வர்த்தக உறவு அணுகுமுறையை மாற்றியுள்ள இந்தியா, முன்பு சீனாவின் இறக்குமதியை குறைப்பதில் கவனம் செலுத்திய இந்தியா, தற்போது ஏற்றுமதியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார். அதேபோல, காலனிய பாதிப்பிலிருந்து விடுபட்டு, சொந்த அடையாளத்தை இந்தியா வலுப்படுத்தி வருவதாகவும், சர்வதேச உறவுகளிலும் இந்தியா மிகுந்த திட்டமிடலுடன் செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் உலக அரங்கில் முக்கிய சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும், சர்வதேச உறவில் குறுகியகால கட்டத்தில் இத்தகைய மாற்றம் மிகவும் அரிதானது என தெரிவித்துள்ளார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.