கோவாவில் மகனை கொலை செய்த தனியார் நிறுவன பெண் தலைமை அதிகாரி எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
கர்நாடகா மாநிலம் தலைநகர் பெங்களூரூவில் Mindful AI LAB எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுசனா சேத். அண்மையில் இவர் மகனுடன் கோவா சென்றிருந்த நிலையில், தங்கியிருந்த அறையில் மகனை கொலை செய்து சூட்கேஸில் உடலை எடுத்துச் செல்லும் போது கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, சுசனா சேத்துக்கு மனநல பரிசோதனை நடத்திய போலீசார், நேற்று காலை வடக்கு கோவாவில் உள்ள கன்டோலிமில் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், மகனை கொலை செய்து விட்டு, கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அந்த காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சுசனா சேத்தின் கைப்பையில் இருந்து கிழிந்த நிலையில் டிஸ்யூ துண்டை போலீசார் கைப்பற்றினர். துண்டு துண்டாக கிழிந்திருந்த அந்த டிஸ்யூவை ஒன்று சேர்த்து பார்த்த போது, அதில், தனது குழந்தையை கணவன் சந்திக்க அனுமதி கொடுத்தது தனக்கு பிடிக்கவில்லை என்று ஐ லைனர் மூலம் எழுதப்பட்டிருந்தது.
எனவே, இந்த காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டாரா..? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அதோடு, அந்தக் கடிதத்தை சீல் வைத்து ஆய்வுக்காகவும் அனுப்பி வைத்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.