கோவா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மீண்டும் பாஜக ஆட்சிதான் என்று முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.
40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 14ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவின.
இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகளில் தற்போது வரை யாரும் பெரும்பான்மையை எட்டவில்லை.
ஆட்சியைப் பிடிக்க 21 இடங்கள் என்ற நிலையில், பாஜக 18 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும், ஆம்ஆத்மி 2 இடத்திலும் முன்னிலையில் உள்ளன. சுயேட்சை மற்றும் மகாராஷ்டிராவாடி கோமந்த் கட்சி உள்ளிட்ட கட்சிகள் 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்தத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் உத்பல் பாரிக்கர் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், கோவாவில் பாஜக ஆட்சி அமைவதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா கோமந்த் கட்சி மற்றும் சுயேட்சைகளின் கூட்டணியுடன் ஆட்சி அமைப்பதாகவும் அவர் கூறினார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.