திருப்பதி : திருமலையில் இருந்து ஸ்ரீவாரி பாதம் செல்லும் மலைப்பாதையில் டெம்போ ட்ராவலர் மற்றும் அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் 9 பேர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் இருந்து ஸ்ரீவாரி பாதம் செல்லும் மலைப்பாதையில் டெம்போ ட்ராவலர் வாகனம் பக்தர்களுடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிரே வந்த அரசு பேருந்து டெம்போ ட்ராவலர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் டெம்போ டிராவலர் வாகனத்தில் பயணம் செய்த ஓட்டுநர் மற்றும் இரண்டு பேர் உட்பட 9 பேர் காயமடைந்தனர். இதனால் டெம்போ வாகனத்தில் வந்த பக்தர்கள் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்களை மீட்டு மற்ற பயணிகள் சிகிச்சைக்காக திருமலை அஸ்வினி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அங்கு சற்று நேரம் போக்குவரத்து முடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.