பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் கருட வாகன சேவை அன்று உற்சவருக்கும் மூலவருக்கும் அலங்கரிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாளுக்கு சூட்டப்பட்ட மலர் மாலைகளை திருப்பதி மலைக்கு கொண்டு வருவது வழக்கம்.
ஆண்டாளுக்கு சூட்டப்பட்ட மலர் மாலைகள் பின்னர் பெருமாளுக்கு அணிவிக்கப்படுவதால் ஆண்டாளுக்கு சூடிக்கொடுத்த சுடர்கொளியாள் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.
புராண காலத்தில் ஆண்டாளுக்கு சூட்டப்பட்ட மாலைகள் பெருமாளுக்கு மீண்டும் சூடப்பட்டதை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவில் கருட வாகன சேவை நடைபெறும் அன்று ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டுவரப்படும் மலர் மாலைகள் பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
அந்த வகையில் நாளை திருப்பதி மலையில் நடைபெற இருக்கும் கருட வாகன சேவையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாளுக்கு சூடப்பட்ட மலர்மாலைகள், இலைகளால் தயார் செய்யப்பட்ட பச்சை கிளிகள், மலர் ஜடை,பட்டு வஸ்திரம், மங்களப் பொருட்கள் ஆகியவை திருப்பதி மலைக்கு கொண்டுவரப்பட்டன.
அவற்றை இணை ஆணையர்,சுதர்சன், செல்லதுரை நிர்வாக அதிகாரி, முத்துராஜா தக்கார், ரவிச்சந்திரன் ஸ்தலத்தார், ரமேஷ் பிரசன்ன வெங்கடேசன் சுதர்சன் ஆகியோர் ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் ஜீயர் மடத்தில் நடத்தப்பட்ட சிறப்பு பூஜைகளுக்கு பின் கோவில் மரியாதைகளுடன் ஊர்வலமாக கொண்டு சென்று ஜீயகளிடம் ஒப்படைத்தார்.
ஜீயர்கள் அவற்றை ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டுவரப்பட்ட மலர்மாலைகள் இன்று நடைபெற இருக்கும் கருட வாகன சேவையை முன்னிட்டு மூலவர் ஏழுமலையானுக்கும், கருட வாகன சேவையில் எழுந்தருள இருக்கும் உற்சவர் மலையப்ப சாமிக்கு அலங்கரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டுவரப்பட்ட மலர் ஜடை, இலைகளால் தயார் செய்யப்பட்ட பச்சைக்கிளி ஆகியவை நாளை காலை திருப்பதி மலையில் நடைபெற இருக்கும் மோகினி அலங்கார ஊர்வலத்தில் உச்சவருக்கு அலங்கரிக்கப்படும்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.