திருப்பதி : இரண்டு வீடுகளில் கொள்ளை போன 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் பறிமுதல் செய்த போலீசார் ஒருவனை கைது செய்த நிலையில் பரபரப்பு வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
திருப்பதியில் உள்ள ஐராலா நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஒரு வீட்டிலும், இந்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி ஒரு வீட்டிலும் இருந்த தங்க ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவை கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டன.
இதுபற்றி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து திருப்பதி போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் இரண்டு வீடுகளிலும் கொள்ளையடித்த கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது கொள்ளை போன இரண்டு வீடுகளுக்கும் நண்பனாக வந்து சென்றுகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில் இரண்டு வீடுகளிலும் கொள்ளையடித்தது சுரேஷ் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சுரேஷை போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். பின்னர் அவனுடைய வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 610 கிராம் தங்க ஆபரணங்கள், பதிமூன்று கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், 5 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுரேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த நான் உடற்பயிற்சி கூடம் ஏற்பாடு செய்து அதன் மூலம் பிழைப்பு நடத்த முடிவு செய்தேன்.
அதற்கு தேவையான பணம் என்னிடம் இல்லாத காரணத்தால் கொள்ளை அடிக்கலாம் என்று முடிவு செய்து இரண்டு வீடுகளிலும் கொள்ளை அடித்தேன் என்று பகீர் வாக்குமூலம் அளித்துள்ளான்.
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
This website uses cookies.