தனியறையில் பெண் பயிற்சியாளரிடம் சில்மிஷம்.. அமைச்சரின் வெறிச்செயல்.. பாலியல் புகாரால் பறிபோன பதவி!!

அரியானா மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங். இவர் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். இவர் மீது முன்னாள் தேசிய அளவிலான வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளரான ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார்.

அந்த புகாரில், விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் எனக்கு இன்ஸ்டாகிராமில் செய்தி அனுப்பினார், எனது தேசிய விளையாட்டு சான்றிதழ் நிலுவையில் இருப்பதாகவும், இது தொடர்பாக சந்திக்க விரும்புவதாகவும் கூறினார்.

என்னிடம் இருந்த சில ஆவணங்களுடன் சந்தீப் சிங்கை அவரது முகாம் அலுவலகத்தில் சந்திக்க சென்றேன் அங்கு சென்றபோது,மந்திரி என்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

அவர் என்னை அவரது அவரது வீட்டில் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். என் ஆவணங்களை மேசையில் வைத்து விட்டு என் காலில் கை வைத்தார், அவர் உன்னை முதல் முறையாகப் பார்த்தபோது, எனக்கு பிடித்து விட்டது என கூறினார். மேலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் உன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன், என்று கூறினார்.

அவர் என்னை அவரது அவரது வீட்டில் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். என் ஆவணங்களை மேசையில் வைத்து விட்டு என் காலில் கை வைத்தார், அவர் உன்னை முதல் முறையாகப் பார்த்தபோது, எனக்கு பிடித்து விட்டது என கூறினார். மேலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் உன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன், என்று கூறினார்.

இந்த நிலையயில் அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜய் அம்பாலாவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து விட்டு பெண் பயிற்சியாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும் போது, ஒலிம்பிக் அளவிலான தடகள வீரர் ஒருவர் எப்படி தவறாக நடந்து கொண்டார் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நானும் ஒரு வீராங்கனைதான், பிப்ரவரியில் இருந்து இது வரை இந்த நபரின் இத்தகைய மோசமான நடத்தையை நான் எவ்வளவு பொறுமையாக பொறுத்துக்கொண்டேன் என்பதை சிந்தித்து பாருங்கள்.விளையாட்டுத் துறையில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என்று பயந்ததால், இந்த சம்பவத்தைப் பற்றி இதற்கு முன் வாய் திறக்கவில்லை.

அவர் ராஜினாமா செய்து சிறையில் அடைக்கப்பட்டவுடன்,பாதிக்கப்பட்டவர்கள் மனம் திறந்து பேச கண்டிப்பாக முன்வருவார்கள். ஒலிம்பிக் அளவிலான தடகள வீரர் மற்ற தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களிடம் எப்படி தவறாக நடந்து கொள்கிறார் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

அமைச்சர் மந்திரி சந்தீப் சிங் விளையாட்டு துறையை ராஜினாமா செய்த நிலையில் முதலமைச்சர் மந்திரி மனோகர் லால் கட்டாரிடம் தனது விளையாட்டு இலாகாவை ஒப்படைத்ததாக கூறினார். எனினும் அவர் அமைச்சரவையில் இருந்து விலகவில்லை.

இது குறித்து அமைச்சர் சந்தீப் சிங் கூறும்போது, என் மீது குற்றம்சுமத்தப்பட்டது அடிப்படையற்றவை, பொய் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என நம்புவதாக கூறிய அவர், விசாரணை அறிக்கை வரும் வரை விளையாட்டு துறையின் பொறுப்பை முதலமைச்சரிடம் ஒப்படைப்பதாக கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை; உறுதியேற்ற தவெக தலைவர் விஜய்…

தேர்தலை சந்திக்கப்போகும் விஜய் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் ஜூன்…

5 minutes ago

பெரிய கட்சியில் என்னை போட்டியிட அழைக்கிறார்கள்… விஜய்க்கு எதிராக நிற்பேன் : பவர் ஸ்டார் மீண்டும் பேச்சு!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு HRWF பவுண்டேஷன் என்ற தனியார் அறக்கட்டளை சார்பாக "மகுடம்" விருதுகள் (2025) வழங்கும் விழா சென்னை…

10 minutes ago

Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…

டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…

2 days ago

முதல் படமே ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்? ஆனா விதி வேலையை காட்டிருச்சு- புலம்பித் தள்ளிய ஸ்ரீகாந்த்

சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…

2 days ago

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி பதவிகளை பறிக்க வேண்டும் : திடீரென வந்த எதிர்ப்பு குரல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…

2 days ago

‘அந்த’ வீடியோக்களை வெளியிட்ட நடிகர்.. நல்லா இருந்த மனுஷனுக்கு என்னாச்சு? ஷாக் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…

2 days ago

This website uses cookies.