இந்தியாவில் கொரோனா தொற்று சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அதுதொடர்பாக ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.
2020ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கொரோனா தொற்று இந்தியாவில் தனது கோர தாண்டவத்தை நிகழ்த்திக் காட்டியது. எனினும், கடந்த சில மாதங்களாக குறைந்த அளவே கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது.
எனினும், கடந்த சில வாரங்களாக தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஐசிஎம்ஆர் கூடுதல் இயக்குனர் சமீரன் பாண்டா கூறுகையில் சில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது. நாம் பார்ப்பது தற்காலிகமே தவிர, புதிய வகையான கொரோனா தொற்றின் தொடக்கம் அல்ல.
இவை நாடு முழுவதும் சீரான அளவில் பரவாது. எனினும், 4வது அலை தொடக்கத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று கூறினார்.
கொரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் சில மாநிலங்களில் அதிகரிக்கும் நிலையில், குறைந்த சோதனையே இந்த அதிகரிப்புக்கு காரணம் என்ற சமீரன் அதற்கு உதாரணமாக டெல்லியை காட்டினார்.
டெல்லியில் சோதனையை அதிகரித்த உடன், பாதிப்பு சதவிகிதம் 7லிருந்து 5 ஆக குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
கோவையில் நாளை மறுநாள் செட்டிபாளையம், எல்.என்.டி பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை தமிழர்…
உன் Goal என்ன? டாக்டர் ஆகவேண்டும், Engineer ஆக வேண்டும், வக்கீல் ஆகவேண்டும், முதல்வர் ஆகவேண்டும் என பலருக்கும் பல…
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். 47 வயதாகும் விஷால் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
This website uses cookies.