இந்தியா

கரையை நெருங்கும் டானா புயல்.. ஒடிசாக்கு முக்கிய எச்சரிக்கை!

மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய பகுதிகளில் நிலவும் டானா புயல் நாளை அதிகாலையில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, நேற்றைய முன்தினம் (அக்.22) அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து, நேற்று (அக்.23) காலை இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு கத்தார் நாடு பரிந்துரைத்த ‘டானா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த புயல் ஒடிசாவின் தாமரா துறைமுகம், பிதர்கனிகா சரணாலயம் மற்றும் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாளை (அக்.25) அதிகாலையில் டானா புயல் கரையைக் கடக்கும் போது, அதனை ஒட்டிய தீவுப் பகுதிகளிலும், பைதரினி மற்றும் பிராமினி ஆகிய ஆறுகளைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கரையை கடக்கலாம் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

இதனிடையே, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மிதமான முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் பல தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. அங்கு மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் சென்று சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தீயணைப்புத் துறையினர் ஆகியோரும் களத்தில் உள்ளனர். அதேநேரம், பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் அளிக்கப்படுகிறது.

இதையும் படிங்க : கோவைக்கு அடுத்த 2 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. வானிலை மையம் எச்சரிக்கை!

இதனிடையே, மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ், வடக்கு 24 பர்கானாஸ், கிழக்கு மேதினிபூர், மேற்கு மேதினிபூர், ஜார்கிராம், பாங்குரா, ஹுக்ளி, ஹவுரா மற்றும் கொல்கத்தா ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை மறுநாள் (அக்.26) வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒடிசா மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக அம்மாநில அரசுத் தரப்பில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இதுவரை 200 ரயில்கள் ரத்து செய்தும், சுற்றுலாத் தலங்களையும் ஒடிசா அரசு மூட உத்தரவிட்டுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

அதிமுகவை முந்தும் தவெக.. கூட்டணி கட்டாயத்தில் இரட்டை இலை? பரபரப்பு சர்வே!

சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…

25 minutes ago

மட்டம் தட்டிய பத்திரிகையாளர்..கொந்தளித்த CSK பயிற்சியாளர்..என்ன நடந்தது.?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…

31 minutes ago

நிமிடத்திற்கு ஒரு கோடியா..ஐபிஎல் விட அதிக சம்பளம் வாங்கிய டேவிட் வார்னர்.!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…

1 hour ago

விரைவில் இபிஎஸ் – அண்ணாமலை சந்திப்பு? மத்தியில் ஒலித்த குரல்.. பரபரக்கும் அரசியல் களம்!

அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…

2 hours ago

ஊரு விட்டு ஊரு வந்து பெண்ணை தீக்கிரையாக்கிய கொடூரம்.. தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…

3 hours ago

தோனியை நீக்குங்க..படு மோசம் CSK ரசிகர்கள்..இப்படியெல்லாமா பண்ணுவாங்க.!

தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…

3 hours ago

This website uses cookies.