இமாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரையில் 60 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய புனித தலங்களுக்கு செல்லும் சாலை நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளன. இதனால் ஆன்மீக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. குறிப்பாக, இமாச்சல பிரதேசம் சிம்லாவில் அடுத்த அடுத்த ஏற்பட்ட நிலசரிவுகளில் இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், பலர் இடுபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இமாச்சலில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிர் பலி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.