திருப்பதி : கோடை விடுமுறை முடிந்தும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறையாத நிலையில் இலவச தரிசனத்திற்காக 20 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்கின்ற்னர்.
கோடை விடுமுறை நாட்கள் முடிந்த நிலையில் கூட திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது. இதனால் இன்று காலை நிலவரப்படி சுமார் 20 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை இலவசமாக வழிபட வேண்டிய நிலை நிலவுகிறது.
மேலும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவுகள் வெளியான நிலையில் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற பெற்றோர்களுடன் வந்திருப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் இலவச தரிசனத்திற்காக 20 மணிநேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் காத்திருப்பு அறைகளில் 64 அறைகளும் நிரம்பிய நிலையில் 3 கிலோ மீட்டர் வரை வரிசையில் பக்தர்கள் காத்துள்ளனர்.
இதனால் தற்போது வரும் பக்தர்களுக்கு 20மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால், 300 ரூபாய் சிறப்பு தரிசன தற்காக 3 மணியில் இருந்து 4 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் வெள்ளி, சனி ,ஞாயிறு கிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து செய்வதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதிக கூட்டம் காரணமாக லட்டு தட்டுப்பாடு இருப்பதால் பக்தர்களுக்கு 2 லட்டு மட்டுமே வழங்கப்படும் என தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.