மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி கடந்த மாதம் 30-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை ஒருமாதம் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தும்படி பா.ஜ.க. தலைமை அக்கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டம் நடத்த தீர்மானித்து முதல் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.
அதைத்தவிர தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
இதையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக உள்துறை மந்திரி அமித்ஷா ஹெலிகாப்டரில் கந்தனேரிக்கு 8-ந்தேதி மாலை 3.30 மணி அளவில் வருகை தர உள்ளார். அதற்காக கூட்டம் நடைபெறும் இடத்தின் அருகே ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான தளம் அமைக்கப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசும் அமித்ஷா அங்கிருந்து 4.45 மணியளவில் ஹெலிகாப்டரில் விசாகப்பட்டணம் செல்கிறார்.
மற்றொரு மத்திய அமைச்சர் வி.கே.சிங் விமானம் மூலம் சென்னைக்கு வந்து அங்கிருந்து காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வர உள்ளார்.
கந்தனேரியில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை தமிழக பா.ஜ.க. மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணைத்தலைவர் நரேந்திரன், வேலூர் மாவட்ட தலைவர் மனோகரன், பொதுச்செயலாளர்கள் ஜெகன்நாதன், பாபு ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று நேரில் பார்வையிட உள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.