பெங்களூருவிலிருந்து சந்தாபுரா வரை அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் வழிதடத்தை அத்திப்பள்ளி வழியாக தமிழகத்தின் ஒசூர் வரை 23 கிமீ தூரத்தை நீட்டிக்க கர்நாடகா அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அதற்காக தமிழக அரசும் இத்திட்டத்தை தொடங்குவதற்காக ஆய்வு பணிகள், நிதி ஒதுக்கீடு என மும்முரம் காட்டி வரும் நிலையில்
கன்னட சலுவளி, கன்னட ரக்சன வேதிகே ஆகிய கன்னட அமைப்பினர் தமிழகத்திற்கு மெட்ரோ ரயில் நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்தும் பெங்களூர் கிராம புற மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்கக்கோரி
ஒசூர் அடுத்த கர்நாடகா – தமிழக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
ஒசூரிலிருந்து கர்நாடகா நோக்கி வரக்கூடிய வாகனங்களை தடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்..
முன்னதாக பேட்டியளித்த வாட்டாள் நாகராஜ்:
ஒசூர், கர்நாடகா மாநிலத்துடன் இணைக்க வேண்டும். காமராஜ் ஆட்சியில் தான் ஊட்டி, ஒசூர் தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டும்.. ஒசூர் இணைத்த பிறகு தான் மெட்ரோ திட்டம் நீட்டிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் ஒரு இன்ச், ஒரு அங்குலம் கூட நீட்டிக்க அனுமதிக்க மாட்டோம் மேகதாது அணைக்கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு அனுமதியளிக்காவிட்டாலும், மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டாலும் மக்கள் நாங்களே கட்டும் பணியில் ஈடுபடுவோம்
பெங்களூருவில் சிறந்த சர்வதேச விமான நிலையமாக தேவேகவுடா விமான நிலையம் உள்ள நிலையில் ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்கிற ஸ்டாலின் உத்தரவை கண்டிக்கிறோம் என்றார்..
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
This website uses cookies.