மும்பையில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட பட்டர் ஸ்காட்ச் கோன் ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ஒர்லெம் பிரெண்டன் செர்ராவ்(27) என்ற பெண் ஆன்லைன் டெலிவரி செய்யும் செயலின் மூலம் ஐஸ்கிரீம் ஆடர் செய்துள்ளார்.
ஆர்டர் செய்தபடி ஐஸ்கிரீம் வந்த நிலையில், ஆவலுடன் ஐஸ்கிரீம் பேக்கை திறந்து பார்த்தபோது ஐஸ் கிரீமைக்குள் மனிதவிரல் கிடந்துள்ளது. இதை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, Yummo ஐஸ்கிரீம் நிறுவனம் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் மனித விரலை கண்டெடுக்கப்பட்ட ஐஸ்கிரீம் நிறுவனத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
ஐஸ்கிரீமில் கண்டெடுக்கப்பட்ட மனித உறுப்பை தடையவியல் ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன், ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்ட இடத்தை போலீசார் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இந்த விஷயம், தொடர்பாக விசாரணை தீவிர படுத்தியுள்ளோம் என்று காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கோன் ஐஸ்கிரீமுக்குள் மனித விரல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
This website uses cookies.